கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகரில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பல் மருத்துவ கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியும் பெற்றோரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். இதனால் அருணாச்சலம் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அருணாச்சலம் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ஐந்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருணாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.