தலிபான்கள் மீண்டும் பெண் கல்விக்கு தடை விதித்துள்ளனர். பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளை பள்ளிகளிலோ அல்லது பயிற்சி மையங்களிலோ சேர்க்கக் கூடாது என பள்ளி முதல்வர்களுக்கு தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கஜினி மாகாணத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்கும் பெண்களையும், படிக்க வருபவர்களையும் திருப்பி அனுப்ப தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். கல்வி நிறுவனங்களில் ஆண், பெண் தனித்தனி வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டன. பெண்களுக்கு வயது முதிர்ந்த ஆசிரியர் அல்லது ஆசிரியை மட்டுமே கற்பிக்க வேண்டும். அரசு வேலைகளில் இருந்தும் பெண்கள் நீக்கப்பட்டனர்.