ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உடனடியாக பள்ளியை விட்டு அனுப்ப வேண்டும் என நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்து வருகிறது. உலக நாடுகள் தலிபான்களில் இத்தகைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது மூன்றாம் வகுப்பு மேல் பெண் குழந்தைகள் படிக்க கூடாது என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.