காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் இன்று கந்தூரி விழா முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறை வேறு ஒரு நாளில் ஈடு செய்யப்படும் என்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு செய்முறை பொதுத்தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.