சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், பிள்ளைகளுக்கு தெரியும், ஹோம் ஒர்க், டியூஷன், எக்ஸாம் எந்த அளவுக்கு கஷ்டம் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் வெற்றி பெற்றால் இவை அனைத்திற்கும் நான் தடைவிதிப்பேன் என்று நகைச்சுவையாக கூறினார். இதைக் கேட்டு அங்கிருந்து அனைவருமே சிரித்தனர்.

அதன் பிறகு தேர்தல் முடியும் வரை யாருக்காவது போன் வந்தால் ஹலோ என்று சொல்லக்கூடாது கைச்சின்னம் என்று தான் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். அங்கிருந்தவர்கள் மத்தியில் மீண்டும் சிரிப்பலையை ஏற்படுத்திய.