2024 ஐ.பி.எல் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்குமுன் ஒவ்வொரு அணியும் தங்களது போட்டியாளர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும். இந்தநிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை, முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
அதற்காக, குஜராத் அணிக்கு, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடியை கொடுத்துள்ளது.

மும்பை அணியில் இருந்து வேறொரு வீரரை மாற்றாமல் பணம் கொடுத்து வாங்கியுள்ளதால். குஜராத் அணி இந்த தொகையை வைத்து துபாயில் நடக்கும் ஏலத்தில் வேறு ஒரு டாப் ஆல்-ரவுண்டரை குஜராத் அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.