கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த ஹமாஸ் குழுவின் தலைவரான முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸின் வான்வெளி நடவடிக்கைகளை நிர்வகிக்கும் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் முராத் கொல்லப்பட்டார். ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.