தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த முன்னணி நடிகையாக இருந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாய் ஹோட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவருடைய கணவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை ஸ்ரீதேவி இயற்கை மரணம் அடையவில்லை என்று போனி கபூர் தெரிவித்துள்ளார். டயட் காரணமாக ஸ்ரீதேவி உணவில் உப்பை சேர்த்துக் கொள்வதில்லை என்றும் இதனால் அடிக்கடி அவருக்கு மயக்கம் வருவது உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஸ்ரீதேவியின் மரணத்தின் உண்மை காரணம் வெளிவந்துள்ளது.