தமிழகத்தில் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக இருக்கிறார் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், நானும் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம். எடப்பாடி பழனிசாமியின் தவறான ஆட்சி முறையால் மக்கள் கொதிப்படைந்து எதிர்ப்பை காட்ட 2019 ஆம் ஆண்டும் 2021 ஆம் ஆண்டு திமுக அரசுக்கு வாக்களித்தனர்.

ஆனால் இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் ஸ்டாலின் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிராக மக்கள் அனைவரும் அமமுக- விற்கு ஆதரவளிப்பார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.