சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பள்ளிப் பேருந்து மாணவர்களை இறக்கி விடுவதற்காகச் சாலையில் நிற்கிறது. பொதுவாக நமது ஊர்களில் பள்ளிப் பேருந்து நின்றாலே, அதை முந்திச் செல்ல மற்ற வாகனங்கள் போட்டி போடும். ஆனால், இந்தக் காணொளியில் பேருந்து நின்ற அடுத்த நொடியே பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் வரிசையாக அப்படியே நின்றுவிட்டன. யாரும் ஹார்ன் அடிக்கவில்லை, முந்திச் செல்ல (Overtake) முயலவில்லை; மாறாகக் குழந்தைகள் பாதுகாப்பாக இறங்கிச் செல்லும் வரை அனைவரும் மிகுந்த பொறுமையுடன் காத்திருந்தனர்.
– No honking
– No overtaking
– Safe Distance
– Traffic comes to a complete stopJust for School bus. It's next to impossible on our roads 😭 pic.twitter.com/SeoOZtcFsU
— 🚨Indian Gems (@IndianGems_) December 25, 2025
இந்தக் காணொளியைப் பகிர்ந்த நெட்டிசன்கள், “குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் போக்குவரத்து விதிகளை எவ்வளவு கண்ணியமாகப் பின்பற்றுகிறார்கள்!” என வியந்து பாராட்டி வருகின்றனர். அதே சமயம், “நமது ஊர் சாலைகளில் இத்தகைய ஒழுக்கத்தைப் பார்ப்பது என்பது தற்போதைக்குச் சாத்தியமில்லாத ஒரு கனவு (Impossible Dream)” என்று ஆதங்கத்துடனும் பதிவிட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் அவசரத்திற்கு மத்தியில், அடுத்த தலைமுறையின் பாதுகாப்பிற்காகக் கடைபிடிக்கப்படும் இந்தச் சாலை ஒழுக்கம், நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.
