சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு, இந்தியர்களின் பொது ஒழுக்கம் குறித்த ஒரு கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர், தான் கண்ட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். நன்கு படித்தவராகத் தோற்றமளிக்கும் ஓர் இந்திய நபர், தான் குடித்த எனர்ஜி ட்ரிங்க் கேனை (Energy Drink Can), அருகிலேயே குப்பைத் தொட்டி இருந்தும், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் புதருக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
இதைப் பார்த்த அந்த வெளிநாட்டுப் பயணி, “இவ்வளவு அருகில் குப்பைத் தொட்டி இருந்தும் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?” என்று திகைத்துப் போயுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “இப்படிப்பட்ட நபர்களால் நாம் இன்னும் எவ்வளவு அவமானங்களைச் சந்திக்கப் போகிறோம்?” என்று பலரும் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Shocking: A British tourist was stunned to see an educated Indian man toss a energy drink can into the bushes despite a bin standing right next to him. How much more embarrassment do we have to endure because of such people? It’s hard to comprehend how someone can litter so… pic.twitter.com/yvZDM2se3D
— Meru (@MeruOnX) December 25, 2025
கல்வி என்பது வெறும் பட்டங்களைப் பெறுவது மட்டுமல்ல, சமூகப் பொறுப்புணர்வோடு நடப்பதும் தான் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. கையின் எட்டும் தூரத்தில் குப்பைத் தொட்டி இருந்தும், அலட்சியமாகப் பொது இடங்களை அசுத்தம் செய்யும் இத்தகைய மனப்போக்கு மாறாதவரை, தூய்மையான இந்தியா என்பது வெறும் கனவாகவே இருக்கும் என்று நெட்டிசன்கள் ஆதங்கப்படுகின்றனர்.
