திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாதம்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அவினாசியில் இருக்கும் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரம்யா ஸ்கூட்டரில் மாதம்பாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சீனிவாசபுரம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியதால் ரம்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். மேலும் அவரது ஹெல்மெட் கழன்று சாலையில் உருண்டு ஓடியது.

இதில் படுகாயமடைந்த ரம்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ரம்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரம்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான ரமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.