திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் டீச்சர்ஸ் காலனியில் பூபதி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சட்டத்தின் கீழ் பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் பூபதிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.