கர்நாடக மாநிலத்தின் சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பா அரசு விடுதி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையலறையில் இருந்து வெளியில் வந்த அமைச்சருக்கு அவரது பாதுகாவலர் ஷூவை மாட்டிவிட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளி வெளியாகி இது ஆணவம் என்று சர்ச்சையான நிலையில் அமைச்சர் இது ஆணவம் இல்லை என்றும் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அவர் தனக்கு உதவியதாய் கூறியுள்ளார்.