சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையை இருவர் கடத்தியுள்ளனர். நேற்று மதியம் 1.30 மணி அளவில் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

குழந்தையை கடத்தியவர்கள் எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பனை செய்ய பேரம் பேசிக் கொண்டிருந்தபோது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த விவகாரத்தில் செல்வம் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் எண்ணூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் காவல்துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டு குழந்தையை மீட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.