திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு அருகே நேற்று மதியம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மின்கம்பியில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 15 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.