கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், வேளாண்மை தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் உள்ளன. வேளாண் பல்கலையின் கீழ், 14 இளநிலை, 3 டிப்ளமோ படிப்புகளுக்கும், மீன்வள பல்கலையின் கீழ் 6 இளநிலை, 3 தொழில்முறை பாடப்பிரிவுகள் உள்ளன.இங்கு ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஏராளமான மாணவர்களும் இங்கு சேர விண்ணப்பித்து வரும் நிலையில்  கோவை வேளாண் பல்கலை விண்ணப்ப பதிவுக்கு, ஜூன் 9ம் தேதி வரை அவகாசம் இருப்பதால், மேலும் விண்ணப்ப பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.