கழுத 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். அந்த கடனை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்த வங்கி கடன் பற்றிய கூடுதல் விவரங்களை https://www.standupmitra.in/ என்ற இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்