இந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் பணம் சம்பாதிப்பதை விட அதை தங்களுடைய வருங்கால தேவைக்காக சேமிப்பதில் தான் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி சேமித்து பெறப்படும் பணத்தை பெறும் நோக்கத்தில் ஷேர் மார்க்கெட்டிங், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். இதுபோல மக்களின் சேமிப்பு பணத்தை அதிகரிக்க அஞ்சல் துறை எம்ஐஎஸ் எனும் மாத வருமான திட்டத்தை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தில் சேரும் நபர்கள் தங்களுடைய மாதம் ஆயிரம் ரூபாயை 5 வருடங்களுக்கு வைப்பு  தொகையாக செலுத்த வேண்டும். தனிநபர் கணக்கில் ஒன்பது லட்சம் ஆகவும்  அல்லது கூட்டு கணக்கில் 15 லட்சம் ஆகவும் மொத்தமாகவும் செலுத்தலாம். இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் பணத்திற்கு 7.4 சதவீதம் வட்டி கிடைக்கும். கூட்டுக்கணக்காக இருந்தால்  9,650 என்று தனி நபர் கணக்காக இருந்தால் 5500 என்று மாதம் தோறும் வழங்கப்படும். மேலும் ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு வைப்பு தொகை முழுவதையும் பயனர்கள் எடுத்துக் கொள்ளலாம்எடுத்துக் கொள்ளலாம்.