தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவ்வப்போது அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.  ஏப்ரல் 3ஆவது வாரத்தில் 11 மாவட்டங்களில் பாசிட்டிவிட்டி விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் இருந்தது கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுபோல, தமிழ்நாடு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள 8 மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.