சென்னை ஐஐடியில் பிடெக் 2ஆம் ஆண்டு படித்து வந்த மாணவர் கேதார் சுரேஷ். இந்நிலையில் இந்த மாணவர் அங்கு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்,  தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 மாதத்தில் இங்கு நடந்த 4வது தற்கொலை இது ஆகும். இதனால், தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை விசாரணையில் கண்டுபிடித்து, அதை நிறுத்த வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.