எடப்பாடி பழனிசாமியை பொது செயலாளராக அங்கீகரித்துவிட்டது தேர்தல் ஆணையம். ஆனாலும் இன்றைய ரம்ஜான் வாழ்த்து செய்தியில் அதிமுக கொடியுடன் கூடிய லெட்டர் பேட்-ஐ ஓபிஎஸ் பயன்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து பேசிய இபிஎஸ், “நாகரீகத்தை கடைபிடித்து, நீதிமன்றம் & தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அவர் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.

இந்நிலையில் நான் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என எந்த நீதிமன்றமும் கூறவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்று இபிஎஸ் சொன்னது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “அப்படி நீதிமன்றம் கூறவில்லையே” என்று புன்னகையுடன் பதிலளித்தார்.