தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022 – 23 கல்வியாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வானது தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு விரைவில் தேர்வுகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,  அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகளை ஜூன் 19ஆம் தேதி திறக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் கீதா தெரிவித்தார். இந்த செய்தியானது கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.