தமிழகத்தில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருக்கிறார் கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா. கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வுகள் முடிந்தபின் ஜூன் 19ஆம் தேதிதான் மீண்டும் கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று கீதா அறிவித்திருக்கிறார். இதன்மூலம் ஒரு மாதத்திற்கு மேல் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.