சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை ஐஐடியில் பி.டெக் இரண்டாமாண்டு படித்து வந்த மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கேதார் சுரேஷ் என்கிற மாணவர் தற்போது ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.