மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் கனமழை காரணமாக பாலத்தின்(sub-way)  அடிப்படைப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒரு கார் முழுமையாக நீரில் மூழ்கியது. இந்த அதிர்ச்சிக்குறிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில், இரண்டு இளைஞர்கள் கடும் மழைநீரை நீந்தி சென்று, முழுவதும்  மூழ்கிய காரை அடைய முயற்சிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அவர்களில் ஒருவர் காரின் பின்னால் ஏறி அதனை முன்னே தள்ள முயன்றார். அதற்குள், காரில் சிக்கிய பயணிகள் ஜன்னல்கள் வழியாக வெளியேறி நீந்திச் சாலையினை அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களின் வீர செயலை பாராட்டினர்.

“>

 

இது மாதிரியான  செயல் உதவி மனப்பான்மையுடன் ,  மீட்பு நடவடிக்கை, தானே மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்கள் — மும்பை மற்றும் ராய்கட் — தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் மழையால் பாதிக்கப்படும் நேரத்தில் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த entire பகுதியில் கடும் மழைக்கு ‘ரெட் அலர்ட் ‘ (Red Alert) விடுத்துள்ளது. பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்  இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.