நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஆயுள் காப்பீடு திட்டத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம். இந்த திட்டம் பிரீமியத்தில் கணிசமான காப்பீட்டு தொகையை அதனுடைய பயனர்களுக்கு வழங்கி வருகிறது வெறும் இருபது ரூபாய் பிரீமியத்தோடு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இரண்டு லட்சம் காப்பீட்டுத் தொகையை இந்த திட்டத்தின் மூலம் பெறலாம்.

இந்த திட்டத்தில் 8 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இணையலாம். இந்த பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால் அல்லது ஊனம் ஏற்பட்டால் நாமினிக்கு இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைவதற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு வங்கியில் சென்று தொடங்கலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்தை வழங்குவது வழங்குகின்றன என்பதால் இந்த பாலிசியை எடுப்பதில் சிரமம் இல்லை.