சென்னையில் வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கான கிரைய பத்திரத்தை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அண்ணா நகர் கோட்டம் மூலமாக மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதில் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற வீட்டின் உரிமையாளர்கள் அதற்கான முழு தொகையை செலுத்தி இருந்தால் அதற்கான ஆவணங்களை அண்ணாநகர் கோட்டத்தில் சமர்ப்பித்தே கிரைய பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.