நாகையில் பிரபல கவிஞர் வாய்மைநாதன் (86) இன்று காலமானார். மரபு கவிதையில் பல்வேறு படைப்புகளை எழுதியவர். இவர் 1986ல் எழுதிய நேதாஜி காவியம் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவியை பெற்றது. அதேபோல், வ.உ.சி வரலாறு, மதுரை வீரன் ( கவிதை நாடகம்), வெண்மணிக் காப்பியம் உள்ளிட்டவை மிகவும் பிரபலம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.