தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி கடைசி நாள் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத மனை பிரிவு மற்றும் மனைகளை வன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த 2016ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட பணிமனை பிரிவில் அமையும் விற்கப்பட்ட அல்லது விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறை படுத்துவதற்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி எந்தவித மாற்றமும் இல்லாமல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மனை அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த இறுதி வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது