சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் உழைப்பாளர் நகர் 3-வது தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக இருந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமாரின் மனைவி கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் கடந்த மாதம் 28-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதனையடுத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துர்நாற்றம் வீசி அழுகிய நிலையில் கிடந்த விஜயகுமாரின் உடலை மீட்டு கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.