அவசர தேவைக்கு பணம் தேவை. அதே நேரம் வங்கிக்கு சென்று பணம் எடுக்க முடியாத சூழலில் இருப்போருக்கு ஆன்லைன் ஆதார் ஏடிஎம் சேவையை இந்திய அஞ்சலக வங்கி செயல்படுத்தி வருகின்றது. இந்த சேவையை பெற ஆதாருடன் உங்கள் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் போதும். அஞ்சலக ஊழியர் வீட்டுக்கே வந்து பணத்தை கொடுத்து விடுவார். மேலும் டெபாசிட், பேலன்ஸ் சேவையையும் பெற முடியும். அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.