இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் தற்போது வரை 14 தவணை பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில்  15வது தவணை (ரூ.2000) நவ., கடைசி வாரம் அல்லது டிச., முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது. 14வது தவணை கடந்த ஜூலையில் 8.56 கோடி விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் 15வது தவணை செலுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.