இன்றைய டிஜிட்டல் உலகில் GPay, PhonePe மூலமாக எங்கிருந்தாலும் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பணப்பரிமாற்றம் செய்துவிடலாம். பலரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்நிலையில் இனி டெபிட் கார்டு இல்லாமலே ATM மையங்களில் பணம் எடுக்கும் வசதி அறிமுகமாக உள்ளது.

உங்கள் செல்போனில் இருக்கும் ஏதாவது ஒரு UPI (GPay, PhonePe) அப்ளிகேஷனை கொண்டு நீங்கள் ஏடிஎம்-இல் பணத்தை எடுக்கலாம். Hitachi நிறுவனம் இந்த ATM மெஷின்களை ஏற்கனவே தயாரிக்கத் தொடங்கிவிட்டது. விரைவில் இதனை நீங்கள் ATM மையங்களில் பார்க்கலாம்