தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துறை மின் நிலையங்களிலும் குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவுகள் பிரிக்கப்பட்ட மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கான 12 மணி நேரம் மும்முனை மின்சார வழங்கும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி டெல்டா பகுதிகளில் குரூப்-1 மற்றும் குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் முன்னுரை மின்சாரம் வழங்கப்படும்.

இரவு நேரத்தில் குரூப்-1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் அனைத்து துறை மின் நிலையங்களிலும் குரூப்-1 பகுதிக்கு காலை 9 மணியிலிருந்து மதியம் மூன்று மணி வரையும், இரவு நேரத்தில் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9.30 மணியிலிருந்து மதியம் 3.30 மணி வரை, இரவு நேரத்தில் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.