I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் நாட்டை காக்க உள்ள கதாநாயகன் என்று கூறினார். மக்கள் முன்னேற்றத்திற்காக திமுக, காங்கிரஸ் பாடுபடுவதாக கூறியவர் மதத்தின் பெயரால் பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.