பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் வந்து கண்டு ரசித்தார்.
போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், மைதானத்தில் இருந்த கேமராக்கள் தோனியின் ஒரு அழகான தருணத்தைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளன.
Safe to say, this kid has the best ‘guess who I sat next to’ story ever. 😎🤩#ENGvIND 1st ODI 👉 Streaming LIVE on JioHotstar! pic.twitter.com/xsm27mbXsE
— Star Sports (@StarSportsIndia) July 14, 2026
தோனி தனது அருகில் அமர்ந்திருந்த சிறுவன் ஒருவன் பாப்கார்ன் சாப்பிடுவதைக் கவனித்து, அவனிடம் அன்போடு அதைப் பகிர்ந்து கொள்ளுமாறு ஜாடை காட்டி கேட்டார்.
முன்னாள் கேப்டனின் இந்த எளிமையான மற்றும் கலகலப்பான அணுகுமுறையைக் கண்டு நெகிழ்ந்து போன ரசிகர்கள், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்குத் தோனியைப் பார்த்ததே ஒரு உற்சாகமான தருணமாக இருந்த நிலையில், சிறுவனுடன் அவர் மேற்கொண்ட இந்தச் சுவாரசியமான உரையாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
