உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த கணவர் நடத்திய அதிரடிப் போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆக்ராவின் ‘நியூ ஆக்ரா’ பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றிற்கு, மகளின் வேலை என்று பொய் கூறிவிட்டுச் சென்ற தனது மனைவியை, வெள்ளி வியாபாரியான கணவர் பின்தொடர்ந்து சென்று, அவருடன் மற்றொரு நபர் இருந்ததை நேரில் கண்டறிந்துள்ளார்.
न्यू आगरा थाना क्षेत्र के एक गेस्ट हाउस में पति ने अपनी पत्नी को प्रेमी के साथ पकड़ा है। पति एक चांदी कारोबारी है जिसे काफी समय से पत्नी पर शक था। सोमवार दोपहर करीब 3 बजे पत्नी अपनी बेटी से काम का बहाना बनाकर निकली थी जिसका पीछा करते हुए पति भी वहां पहुंच गया और दोनों को रंगे… pic.twitter.com/7rjx959RpR
— Anurag Chaddha (@AnuragChaddha) July 14, 2026
இதையடுத்து ஏற்பட்ட பொது இடத்திலான மோதல் மற்றும் வாக்குவாதம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது மனைவி தன்னைப் பிரிந்து செல்வதற்காக முன்னதாகவே தன் மீது வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை போன்ற பொய்ப் புகார்களைத் தாக்கல் செய்திருந்ததாகக் கணவர் அந்த வீடியோவில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இரு தரப்பினரிடமும் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். இறுதியாக, இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
