தமிழக அரசு சார்பில் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 40 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே இதில் பயன்பெற இயலும். இதற்க்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை அக்டோபர் 31 மாலை 5 மணிக்குள் அதே இணையதளத்திலோ அல்லது நேரிலோ வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.