தமிழகத்தில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறது. மொத்த உற்பத்தி பகுதியான விருதுநகரில் கிலோவுக்கு பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை எண்ணை விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலை எண்ணெய் 15 கிலோ 2780 ரூபாய், நல்லெண்ணெய் 15 கிலோ 6765 ரூபாய், பாமாயில் 15 கிலோ 1415 ரூபாய் என மொத்த விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.