பொதுத் தேர்தலின் போது வாக்களித்த வேட்பாளர்கள் விரலில் மை வைத்தால் நுழைவு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரச்சாரம் நாடு முழுவதும் நடந்து வருகின்றது. சமூக வலைத்தளங்களில் நடக்கும் இந்த பிரசாரத்தை யாரும் நம்ப வேண்டாம் எனவும் இதெல்லாம் பொய் பிரசாரம், ஆதாரமற்ற NTA அத்தகைய விதிகள் மற்றும் வழிமுறைகளை வெளியிடவில்லை, வதந்திகளை நம்பாமல் இளைஞர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும், இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வரும் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.