டெல்லியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் குடலில் இருந்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்  ஸ்கிசோஃப்ரினியா  என்ற 26 வயது இளைஞர் மருத்துவமனையில் வயிறு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றை மருத்துவர்கள் சோதனை செய்தபோது குடலில் 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் அவர் விரும்பிய காந்தங்கள் அனைத்துமே வெவ்வேறான வடிவங்களில் இருந்தது.

அதாவது பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்டிருந்த அவர் துத்தநாகம் உடற்கட்டை உருவாக்க உதவும் என்று நினைத்து விழுங்கியுள்ளார். இது போன்ற பொருட்களை உட்கொள்வது உயிருக்கு மிகவும் ஆபத்தானது. இப்படி செய்யவே கூடாது என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் அந்த நபருக்கு 20 நாட்களாக வாந்தி மற்றும் வயிற்று வலி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் 22 நாட்களுக்கு முன்பு காந்தம் மற்றும் நாணயம் இவற்றை சாப்பிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அவை அனைத்தும் அகற்றப்பட்டு அந்த நபர் நலமாக உள்ளார்.