ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்த மணமகன் ஒருவர் உத்திரபிரதேசம் சுல்தான் பூரை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பெண்ணுக்கு மணமகன் வீட்டார் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்ததுடன் தங்க நகை, ஆடை மற்றும் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இவை அனைத்தையும் வாங்கிக் கொண்ட மணப்பெண் முதல் இரவுக்கு கொண்டு வந்த பாலில் மயக்க மருந்து கலந்து மணமகனுக்கு கொடுத்துள்ளார்.

அதன் பிறகு இரவோடு இரவாக நகை மற்றும் பணம் என அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். மயக்கம் தெளிந்த பிறகு மணமகன் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.