வேலையில்லாத இளைஞர்களுக்கு கைத்தறி கற்றுக்கொடுத்து அதன் மூலம் 11,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளித்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சி காலம் முடியும் வரை நாளொன்றுக்கு 250 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தை  பார்க்கவும். இதற்கு விண்ணப்பிக்க  இன்றே  (செப்., 20) கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்கவும்.