தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் SMS மூலம் அனுப்பப்படுகிறது.

அந்த காரணம் தவறானது என்றால், மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். இந்நிலையில், மேல்முறையீடு செய்ய தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெண்கள் குவிந்து வருகின்றனர்.