முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், சுஷ்மா ஸ்வராஜும் வலிமையான பெண்கள் என ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என  திமுக  எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பேசிய அவர், பெண்கள் தைரியமானவர்கள், ஏன் சுதந்திர போராட்டத்திலும் போர்களிலும் பெண்கள் கலந்து கொண்டு பார்த்ததில்லையா, அரசியலில் தைரியமான பெண்ணாக இந்திரா காந்தி இருந்ததில்லையா என கேள்வி எழுப்பினார் கனிமொழி.

அப்போது ஜெயலலிதா என உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். அதற்கு கனிமொழி, ஜெயலலிதாவும் தைரியமான பெண் தலைவர் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என தெரிவித்தார்.