விடியல் செயலியால் ஈரோட்டிலிருந்து கோவை மாவட்டத்துக்கு 50 நிமிடத்தில் வந்தடைந்த இந்து பெண்ணின் இருதயம் இஸ்லாமிய இளைஞருக்கு பொருத்தி மருத்துவர்கள் உயிரை காப்பாற்றி உள்ளனர்.  நவம்பர் 4 ஆம் தேதி ஈரோட்டில் மூளை சாவு அடைந்த மஞ்சுளா என்பவரின் இதயம் கோவையில் இதய செயலிழப்பால் உயிருக்கு போராடிய ரஹ்மானை காப்பாற்றியுள்ளது.

இதற்கு, தமிழக அரசின் விடியல் செயலி தான் பெரும் உதவியாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகள் பற்றிய விவரங்களை கையாள ஏதுவாக உருவாக்கப்பட்டது தான் இந்த விடியல் செயலி. இது தொடர்ந்து பலரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றி வருகிறது என்று கூறப்படுகிறது.