தமிழகத்தில் பல முக்கிய கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. ஏழை எளிய ஆதரவற்ற பொதுமக்கள் இதன் மூலமாக பயனடைந்து வரும் நிலையில் கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறித்து ஆராய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு கோவில்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் 764 கோவில்களில் அன்னதானத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.