தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் ஒரு சில இடங்களில் 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.