அதிமுக கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு ஐ கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை கோரி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவகாசம் வழங்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு எத்தனை முறை நேரம் கேட்பீர்கள் என கோர்ட் அதிருப்தியும் தெரிவித்தது.